Sunday, August 30, 2009

இயற்கையும் சிரிக்கும்


புல்வெளியில் பனித்துளிகள் புதுக்கோள வண்ணங்களில்
இலைவழியே ஒழுகிப்போய் தரைதழுவி வேர்நனைக்கும்
இதைத்தடுக்க எழும்புகின்றான் கிழக்கிலிள வெய்யோன்
அதைத்தடுக்க இயலவில்லை அந்தச்சிறு தாவரத்தால்
@
பனித்துளியை ஆவியாக்கிப் பரிதிமேல் எடுப்பதாலே
இனி எதிரி இவன்தான் எனச்சினம் புற்களுக்கு
கடுங்கோபம் அறிந்தநல் கதிரவனோ மனமிறங்கி
இடையிலே சந்தித்த எடையிலா முகிலிடம்
@
இரவலாய்த் தருகிறேன் முடிவிலே மழையாக
சொரிந்துநீ சினம்தணி தரைவளர் இனம்வாழ
அறிந்தபுல் செடியாகி மரமாகி கனிந்ததுவே
பரந்தவெளி ஞாயிறும் பாசத்தில் சிரித்ததுவே !

No comments:

Post a Comment