Thursday, October 29, 2009

பாடப்புத்தகம்

புதிதாகப் பாடப்புத்தகம் பெற்றோர்
பெற்றுத்தர மாட்டார்கள்
புங்கங் கொட்டை
புன்னைக் கொட்டை
பொறுக்கிச்
சேர்த்து விற்று
போன ஆண்டு மாணவன்
படித்து கிழித்த
அட்டையில்லாப் புத்தகத்தை
ஆசையோடு வாங்கிப் பிரித்தால்
நரம்பெடுத்த நொச்சியிலை
நிறம் குன்றா மயிலிறகு
பாடம் செய்து வைத்திருப்பதைப்
பார்த்து ரசித்திடுவோம்
மயிலிறகு குட்டிபோடுமென
மாதம் பல நாங்களும்
அடை காத்திருப்போம்
ஆசைகளை .

(எனது "இன்னும் கேட்கிற சத்தம் " நூலிலிருந்து)

3 comments:

  1. வலைப்பதிவில் தங்களின் எழுத்துகளைப் படிப்பதில்
    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது


    அன்புடன்
    திகழ்

    அன்புடன் நான் என்று ஆரம்பித்து
    நட்புடன் நான் என்று தொடர்ந்து
    இப்படிக்கு நான் என்று நீண்டு........

    ReplyDelete
  2. அடை காத்திருப்போம்
    ஆசைகளை]]

    தெளிவாய் ...

    ReplyDelete