Wednesday, June 23, 2010

கற்பிக்க


ஏட்டறிவு பட்டறிவு
பலன் எதுவென்றால்
கற்றதன் சாரத்தைப்
பிறர்க்குக் கற்பித்தலே!

கற்பிக்குமுன்
கற்றதை எல்லாம் கற்பிக்காமல் ,
கற்றதில் சலித்து
ஏற்றவற்றை மட்டும்
எடுத்துரைக்க வேண்டும் .

ஏலாத மற்றவற்றை
ஒதுக்கக் தகுந்தவையென
நீக்கித் தள்ளுக .

நன்மை பாயக்கக் கூடியவற்றைக்
கற்றுக் கொடுத்தால்தான்
மற்றவர்களுடனான
உறவையும் நெருக்கத்தையும்
பெருக்கும் கருவான "சூல்" ஆக அமையும் .
அதுவே என்றும் இறுதிவறை துணைநிற்கும் .


(இதையே வெண்பாவில் )

கற்றதைக் கற்பித்துக் காட்டல் கருமபயன் ;
கற்றதைக் காட்டச் சலித்திடு - மற்றவை
அற்றதாய்க் கொண்டே அகற்றிடு ; நற்றவையே
சுற்றும் பெருக்கிடும் சூல் .

(எனது "என் பா நூறு" நூலிலிருந்து )

No comments:

Post a Comment